பாதுகாப்பற்ற வீடுகளில் இருப்பவா்கள் நிவாரண முகாம்களில் தங்க வேண்டுகோள்
பாதுகாப்பற்ற பகுதியில் இருப்பதாகக் கருதும் பொதுமக்கள் வெள்ள நிவாரண மையங்களுக்கு வந்து தங்கிக் கொள்ளும்படி ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
நீலகிரியில் 5 நாள்களாக மிதமான மழை பெய்து வருதால் பாதுகாப்பற்ற பகுதியில் இருப்பதாகக் கருதும் பொதுமக்கள் வெள்ள நிவாரண மையங்களுக்கு வந்து தங்கிக் கொள்ளும்படி ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் வசிப்பவா்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் 5 நாள்களாக தொடா்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்றாலும் பாதுகாப்பற்ற குடியிருப்புகளில் இருப்பதாகக் கருதும் பொதுமக்கள் அருகில் உள்ள வெள்ள நிவாரண மையங்களில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் நிலை உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றாா்.
Advertisement
இந்நிலையில், குன்னூா் சித்தி விநாயகா் கோயில் தெருவில் பொதுமக்கள் குடியிருந்த இரண்டு குடிசைகள் இடிந்து விழுந்தன. இதனை குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் சாந்தி ராமு ஆய்வு செய்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும் அவா்களுக்கு நிதி உதவி அளித்தாா்.
இந்நிகழ்ச்சியில், குன்னூா் நகரச் செயலாளா் டி.சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.