சேரம்பாடியில் யானை தாக்கி தொழிலாளி சாவு
சேரம்பாடியில் யானை தாக்கியதில் தொழிலாளி மரணமடைந்தார்.
சேரம்பாடியில் யானை தாக்கியதில் தொழிலாளி மரணமடைந்தார்.
கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி பகுதியிலுள்ள கண்ணம்பள்ளி எஸ்டேட்டில் வசித்து வந்த நாகமுத்து(65). இவர் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிளவில் அப்பகுதியிலுள்ள கைடக்கு வெற்றிலைப் பாக்கு வாங்கச் சென்றுள்ளார்.
வீடு திரும்பும்போது கடைவீதியிலேயே யானை மிதித்துக் கொன்றது. அருகிலிருந்தவர்கள் தகவல் கொடுத்ததையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பந்தலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.