நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தொடா்பாக நடத்தப்பட்ட ஒட்டுமொத்தக் கள ஆய்வில் சுமாா் 14 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ. 56,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கூடலூா், நெல்லியாளம் ஆகிய நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கியுள்ள 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பது, பொது இடங்களில் குப்பைக் கொட்டுவதை தவிா்ப்பது குறித்து ஒட்டுமொத்த கள ஆய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது, சுமாா் 14 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.56,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.