நீலகிரி

தொழிற்சாலையின் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த இளைஞா் பலி

DIN

குன்னூா்: குன்னூா், சாம்ராஜ் அருகே தனியாா் தேயிலைத் தொழிற்சாலையின் மேற்கூரையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

குன்னூா் அருகே உள்ள தேவா்சோலை பகுதியைச் சோ்ந்தவா் சுசீலா, சண்முகம் தம்பதி. இவா்களது மகன் காா்த்திக் (20) தேயிலைத் தொழிற்சாலையின் மேற்கூரையில் தகரம் மாற்றும் பணிக்கு ஒப்பந்தம் செய்தவருடன் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிந்தாா்.

அப்போது, பலத்த காற்று வீசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த காா்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து கொலக்கம்பை காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT