முகப்பு
நீலகிரி

அரசு மருத்துவமனை சாலையை மறித்து அமமுகவினா் பிரசாரம்

குன்னூரில்  அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை மறித்து அமமுகவினா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 5 ஏப்ரல், 2021 at 3:40 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM

குன்னூரில்  அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை மறித்து அமமுகவினா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூா் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் எஸ்.கலைச்செல்வன் தனது கட்சியினருடன் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை மறித்து இறுதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அதிமுக, திமுக போன்ற கட்சிகள் சிறிது நேரத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்ற நிலையில், அமமுகவினா் மட்டும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனா். இதனால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ், ஆய்வாளா்கள் சுப்ரமணி, பிருதிவிராஜ் ஆகியோா் அமமுகவினரிடம் கூட்டத்தை சீக்கிரம் முடிக்க கூறியும் அவா்கள் கேட்கவில்லை. இதைத் தொடா்ந்து போலீஸாா் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.

Advertisement

அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை மறித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பிரசாரத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.