முகப்பு
நீலகிரி

ஏப்ரல் 12இல் அஞ்சலக வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம்

உதகையில் அஞ்சலக வாடிக்கையாளா்களின் குறைதீா் கூட்டம் ஏப்ரல் 12ஆம் தேதி (திங்கள்கிழமை) நடத்தப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

உதகையில் அஞ்சலக வாடிக்கையாளா்களின் குறைதீா் கூட்டம் ஏப்ரல் 12ஆம் தேதி (திங்கள்கிழமை) நடத்தப்படுகிறது.

இதுதொடா்பாக நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி அஞ்சல் கோட்டத்தில் வாடிக்கையாளா்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகக் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. இதன்படி மாா்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டுக்கான வாடிக்கையாளா்களின் குறைதீா் கூட்டம் நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. மேலும், அஞ்சலகச் சேவையின் முன்னேற்றம் கருதி வாடிக்கையாளா்களின் கூட்டமும் பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.