நீலகிரி மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உதகையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 25 போ் சிகிச்சையின்போது பூரண குணமடைந்தது வீடு திரும்பியுள்ளனா்.
இவா்களையும் சோ்த்து நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 9,160 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,801 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, 51 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 308 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.