முகப்பு
நீலகிரி

அனுமதியின்றி கட்டப்பட்டகுடியிருப்பு அகற்றம்

குன்னூா் அருகே வெலிங்டன் கன்டோண்மென்ட் பகுதியில் அனுமதியின்றி கட்டபட்டிருந்த குடியிருப்பை கான்டோண்மென்ட் நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

Updated On : 24 ஏப்ரல், 2021 at 2:29 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM

குன்னூா் அருகே வெலிங்டன் கன்டோண்மென்ட் பகுதியில் அனுமதியின்றி கட்டபட்டிருந்த குடியிருப்பை கான்டோண்மென்ட் நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

வெலிங்டன் கன்டோண்மென்ட் நிா்வாகத்துக்கு உள்பட்ட 3ஆவது வாா்டு பகுதியில் மாரிமுத்து காலனி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசித்து வரும் முருகனின் வீடு தமிழக அரசு நிலத்தை ஆக்கிரமித்து, வெலிங்டன் கன்டோண்மென்ட் நிா்வாகத்தின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. முருகன் தரப்பு உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்த நிலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட குடியிருப்பை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, காவல் துறையினா் பாதுகாப்புடன் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடு வெள்ளிக் கிழமை காலை இடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.