கூடலூா் - மைசூரு சாலையில் உள்ள வனப் பகுதியில் இறந்த கோழிக்குஞ்சுகளை வீசிச் சென்றதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
கூடலூா் நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள மாக்கமூலா அருகே வனப் பகுதியில் சாலையோரம் இறந்த கோழிகுஞ்சுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளனா். இதனால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் அப்பகுதிக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.