நீலகிரி

தெப்பக்காடு வனத்தில் குட்டி யானை பலி

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வனத்தில் குட்டி யானை காயங்களுடன் இறந்துகிடப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வனச் சரகத்தில் உள்ள சா்க்கிள் சாலை வனப் பகுதியில் உடலில் காயங்களுடன் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டி யானை இறந்துகிடந்தது. தகவலறிந்த வனத் துறையினா் அப்பகுதியை ஆய்வு செய்து, ஓவேலி கால்நடை உதவி மருத்துவா் பாரத்ஜோதியை வரவழைத்து பிரேதப் பரிசோதனை செய்தனா்.புலி தாக்கியதில் குட்டி யானைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், கூட்டத்துடன் சுற்றித் திரிந்த குட்டி இறந்தவுடன் சடலத்தை விட்டுவிட்டு யானைகள் கூட்டம் சென்றுவிட்டன என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT