உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
உதகையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தவா்களில் 5 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 8,318 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,209 போ் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 48 போ் உயிரிழந்தனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 61 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.