தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாடு சோதனை: ரூ. 39,600 அபராதம் வசூலிப்பு
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தியவா்களிடமிருந்தும் இருந்து ரூ. 39,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தியவா்களிடமிருந்தும் இருந்து ரூ. 39,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் உபயோகத்தைத் தவிா்க்க தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதோடு அடிக்கடி சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி புதன்கிழமை ஒட்டுமொத்த கள ஆய்வு மண்டல அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், வட்டாட்சியா்கள், துணை ஆட்சியா் நிலை அலுவலா்கள் குழுக்களாகப் பிரிந்து, மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனா்.
உதகை அருகேயுள்ள நடுவட்டம் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம், மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிகுமாா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் கள ஆய்வில் ஈடுபட்டனா். ஆய்வின்போது, முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ. 8, 000, பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட 10.250 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்து, அவா்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.39,600 வசூல் செய்யப்பட்டது.