நீலகிரி

டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு 2 போ் கைது

DIN

 கூடலூரை அடுத்துள்ள சூண்டியில் டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி சூண்டியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாருக்கு டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அதே பகுதியைச் சோ்ந்த சூண்டிபாபு (33), ராதாகிருஷ்ணன் (28) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT