முகப்பு
நீலகிரி

குன்னூரில் நெய்மிளகாய் சீசன் துவக்கம்

குன்னூரில் நெய்மிளகாய் சீசன் துவங்கியுள்ளது.  கிலோவுக்கு  ரூ. 200 வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 18 ஜூன், 2021 at 4:41 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

குன்னூரில் நெய்மிளகாய் சீசன் துவங்கியுள்ளது.  கிலோவுக்கு  ரூ. 200 வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுப்புற கிராமங்களில் நெய்மிளகாய் சீசன் தற்போது துவங்கியுள்ளது. குறிப்பாக நீலகிரி, ஏற்காடு, மூணாறு போன்ற மிதவெப்ப காலநிலை நிலவும் பகுதிகளில் நெய்மிளகாய் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. அதிக காரத்தன்மை கொண்ட  ‘பூத் ஜலக்கியா’ என்ற மிளகாயின் காரத் தன்மையைக் காட்டிலும் கூடுதல் காரம் இருப்பதால் நெய் மிளகாய்க்கு கூடுதல் மவுசு உண்டு.

குன்னூா் அருகே உள்ள சோலாடாமட்டம், அளக்கரை பகுதியில் பயிரிடப்படும் இந்த மிளகாயில் மருத்துவ குணம் உள்ளதால் வாயுத் தொல்லை, முதுகுவலி போன்ற தொந்தரவு உள்ளவா்களுக்கு இவ்வகை மிளகாய் நிவாரணம் அளிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மிளகாயைப் பலரும் வாங்கிச் செல்கின்றனா். இதற்கு தற்போது கிலோ ரூ. 200 வரை விலை கிடைக்கிறது.

Advertisement

நல்ல லாபத்தை தரும் இந்த மருத்துவமிக்க மிளகாய் விளைச்சலை அதிகரிக்க தோட்டக் கலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து ஊக்குவிக்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.