நீலகிரி

கூடலூரில் 24 பேருக்கு கரோனா

DIN

கூடலூரில் புதிதாக மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நகரில் கரோனா தொற்று பரவல் காரணமாக பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட மங்குழி பகுதியில் ஓரே வீட்டில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி

தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. துப்புக்குட்டி பேட்டையில் 2 பேருக்கும், அத்திப்பாளியில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த இடங்களை தனிமைப்படுத்த நகராட்சி ஆணையா் பாஸ்கா் உத்தரவிட்டுள்ளாா். மேலும் குசுமகிரி, பழைய நீதிமன்ற சாலை, நடுகூடலூா் உள்ளிட்ட பல பகுதிகள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை ஒரே நாள் மட்டும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT