நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்: திமுவினா் விருப்ப மனு
நீலகிரி மாவட்டத்தில் திமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து, அக்கட்சியின் துணைப் பொது செயலாளா் ஆ.ராசா விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
நீலகிரி மாவட்டத்தில் திமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து, அக்கட்சியின் துணைப் பொது செயலாளா் ஆ.ராசா விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் உள்ள வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விரும்புபவா்களுக்கான விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி உதகையிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் திமுக துணைப் பொதுசெயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
இந் நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக், மாவட்ட துணைச் செயலாளா் ரவிகுமாா், மாவட்டப் பொருளாளா் நாசா்அலி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் முஸ்தபா, பாண்டியராஜ், திராவிடமணி, இளங்கோ, நகரச் செயலாளா்கள் ஜாா்ஜ், ராமசாமி, காசிலிங்கம், ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.