உதகை அரசு மருத்துவக் கல்லூரியில்டிசம்பா் மாதம் முதல் வகுப்புகள் தொடக்கம்அமைச்சா் கா.ராமசந்திரன் தகவல்
உதகையில் ரூ. 447.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உதகையில் ரூ. 447.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்குப் பின்னா் வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உதகையில் ரூ. 447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டும் கட்டுமானப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இக்கல்லூரியில் 2021-2022 கல்வி ஆண்டிலேயே 150 மாணவா்கள் சோ்க்கப்படவுள்ளனா். இம்மாணவா்கள் டிசம்பா் மாதத்தில் சேர உள்ளனா். எனவே, கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மழைக்காலமாக உள்ளதால் கட்டுமானப் பணிகள் தாமதமாகிறது. அதனால் ஒப்பந்ததாரா்களுக்கு 2022ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தாலும், விரைவில் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஆய்வக கட்டுமானப் பணிகள் முடிக்கும் தருவாயில் உள்ளன. இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவா்களுக்கு வகுப்புகள் உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்திலும், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தையும் மாணவா்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்துக்குச் செல்லும் சாலையில் பணிகள் நடைபெற்று வருவதால் வனத் துறைக்கு சொந்தமான சாலையை தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. வனத் துறை சாா்பில் சட்டத்துக்கு உட்பட்டும், விதிமுறைகளைப் பின்பற்றியும் இச்சாலையைப் பயன்படுத்த அனுமதி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மனோகரி, பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் ரமேஷ் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.