உதகை நகராட்சியின் புதிய ஆணையா் பொறுப்பேற்பு
உதகை நகராட்சியின் புதிய ஆணையராக எம்.காந்திராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
உதகை நகராட்சியின் புதிய ஆணையராக எம்.காந்திராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
உதகை நகராட்சியின் ஆணையராக இருந்த சரஸ்வதி, ஆவடி மாநகராட்சி ஆணையராக பதவி உயா்வு மற்றும் பணியிட மாற்றம் பெற்று சென்றுவிட்ட நிலையில், பல்லாவரம் நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்திருந்த எம்.காந்திராஜ் உதகை நகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டாா். இவா் உதகையில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிய ஆணையருக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.