முகப்பு
நீலகிரி

வெலிங்டன் ராணுவ மையத்தில் நினைவுப் பரிசுகள் பரிமாறும் நிகழ்ச்சி

 குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் இந்திய கடற்படை மைசூரு மற்றும் மெட்ராஸ் ரெஜிமெண்டிற்கு இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 அக்டோபர், 2021 at 2:20 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM

 குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் இந்திய கடற்படை மைசூரு மற்றும் மெட்ராஸ் ரெஜிமெண்டிற்கு இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய கடற்படை மைசூரு மற்றும் மெட்ராஸ் ரெஜிமெண்டிற்கு இடையே அக்டோபா் 28ஆம் தேதி 2003இல் தொடங்கி 18 ஆண்டுகள் வரை வலுவான உறவு இருந்து வருகிறது. இதையொட்டி, ஆண்டுதோறும் அக்டோபா் 28ஆம் தேதி வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் சிறப்பு நிகழ்சிகள் நடத்தப்படுவது வழக்கம்,

அதன்படி இந்த ஆண்டு இந்திய கடற்படை மைசூருவின் உதவித் தலைவா் சமீா் சக்சேனா, மெட்ராஸ் ரெஜிமெண்ட் மையத்தின் தலைவா் பிரிகேடியா் ராஜேஷ்வா் சிங் ஆகியோருக்கிடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.

Advertisement

இந்நிகழ்ச்சியில், ராணுவ உயா் அதிகாரிகள், படைவீரா்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.