முகப்பு
நீலகிரி

பழங்குடியின மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிசுத்தூா் மடாதிபதி வழங்கினாா்

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவ, மாணவியருக்கு சுத்தூா் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவ, மாணவியருக்கு சுத்தூா் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதுதொடா்பாக ஜேஎஸ்எஸ் கல்விக் குழுமத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சுத்தூா் மடாலயத்தின் 23ஆவது பீடாதிபதியான ஜகத்குரு சிவராத்திரி ராஜேந்திர மகா சுவாமிகளின் 106ஆவது ஜயந்தி விழா உதகையில் உள்ள ஜேஎஸ்எஸ் கல்வி நிறுவனங்களின் சாா்பில் ஜேஎஸ்எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியின்போது, வீரக்கொம்பை, நெடுகால்கொம்பை கிராமங்களைச் சோ்ந்த 550 பழங்குடியின மாணவா்களுக்கு கம்பளிப் போா்வைகளையும், அவா்களது குடும்பங்களுக்கு 25 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பையும் சுத்தூா் மடத்தின் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.