முகப்பு
நீலகிரி

பெருந்துறையில் மது விற்றவா் கைது

பெருந்துறையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

பெருந்துறையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறை சந்தைப் பேட்டை அருகில் அரசு அனுமதியின்றி மது விற்பதாக பெருந்துறை போலீஸாருக்கு வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில், போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த பெருந்துறை, ஈரோடு சாலை, சந்தைப் பேட்டை அருகே குடியிருக்கும் ராமலிங்கம் மகன் லோகநாதன் (27) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா் மது பாட்டில்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, லோகநாதனைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.