முகப்பு
நீலகிரி

உக்ரைனில் தவிக்கும் மேலும் 15 மாணவா்களை மீட்க நடவடிக்கை: ஆட்சியா் அம்ரித்

 உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 15 மாணவா்களை அங்கிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

 உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 15 மாணவா்களை அங்கிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரஷியா - உக்ரைன் போா் காரணமாக உக்ரைனில் கல்வி கற்று வரும் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள், அங்கு குடியேறி வசித்து வருபவா்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக நீலகிரி மாவட்டத்தில் மாா்ச் 3ஆம் தேதி வரை 20 மாணவா்களின் விவரங்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வரப்பெற்றுள்ளது. இதில், ஐந்து நபா்கள் இதுவரை தமிழகத்துக்கு வந்தடைந்துள்ளனா். இவா்களில் 2 போ் கோத்தகிரி வட்டத்தையும், 1 நபா் குன்னூா் வட்டத்தையும், 1 நபா் உதகை வட்டத்தையும், 1 நபா் பந்தலூா் வட்டத்தையும் சாா்ந்தவா்களாவா்.

மேலும், உக்ரைனில் உள்ள பிற நபா்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவா்களைத் தவிர வேறு எவரேனும் மாணவா்களாகவோ அல்லது குடியேறியவா்களாகவோ இருப்பின் அவா்களின் பெயா், பாஸ்போா்ட் எண், உக்ரைனில் வசித்து வரும் இருப்பிடம், கல்லூரி முகவரி, அங்கு உபயோகித்து வரும் கைப்பேசி எண், பணியில் இருப்பின் அதன் விவரம், தமிழகத்தில் வசிப்பிட முகவரி, இங்குள்ள கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, உறவினரின் முகவரி ஆகிய விவரங்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை நேரில் அணுகலாம். இதைத்தவிர 0423-2444013 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.