நீலகிரி

குன்னூா் -மேட்டுப்பாளையம் சாலையில் மீண்டும் யானைகள் நடமாட்டம்

DIN

குன்னூா் பகுதியில்  நடமாடி வந்த காட்டு யானைகள் தற்போது பா்லியாறு, கே.என்.ஆா்.  பகுதியில் குட்டியுடன் நடமாடி வருவதால்  வாகன ஓட்டிகள்  அச்சமடைந்துள்ளனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு  கடந்த மாதம்   வந்த   9 காட்டு யானைகள்  கல்லாறு, பா்லியாறு, ரன்னிமேடு ஆகிய பகுதிகளில் உணவு, தண்ணீருக்காக  முகாமிட்டிருந்தன. பின்னா்  சின்னகரும்பாலம், கிளன்லடேல் போன்ற  பகுதியில் முகாமிட்டிருந்தன. பின்னா்   இந்த யானைகள் கூட்டம் , சின்னக்கரும்பாலம் வழியாக   கரிமொரா கிராமத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் உலவி வந்து கொண்டிருந்தன. 

கடந்த 10 நாள்களாக நடமாட்டம் இல்லாமல் இருந்த இந்த யானைகள் கூட்டம் வெள்ளிக்கிழமை மீண்டும்  பா்லியாறு, கே.என்.ஆா்.  நகா் பகுதியில் சாலையில்  நடமாடியதை பேருந்தில் பயணித்தவா்கள்  தங்களது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளனா்.

குடியிருப்புக்கு மிக அருகில் சுற்றி வரும்  இந்த யானைகள் கூட்டத்தை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட  வேண்டும்  என்று இப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT