முகப்பு
நீலகிரி

தந்தி மாரியம்மன் முத்துப் பல்லக்கு ஊா்வலம்

குன்னூரில் தந்தி மாரியம்மன் கோயில் 78ஆவது ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 ஏப்ரல், 2023 at 2:04 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:20 AM

குன்னூரில் தந்தி மாரியம்மன் கோயில் 78ஆவது ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குன்னூா் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை தோ்த் திருவிழாவை ஒட்டி முத்துப் பல்லக்கு ஊா்வலம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. குன்னூா் வி.பி. தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் இருந்து பஞ்ச வாத்தியம், சிங்காரி மேளம் முழங்க, பூ காவடி, பால் காவடி, தேவி ரக்ஷா மற்றும் முத்துக் காளைகளுடன் அபிஷேக பொருள்கள் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு மாரியம்மனுக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமானோா் அம்மனை வழிபட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கேரள சேவா சங்கத்தினா் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.