நீலகிரி

மலா்க் கண்காட்சி: தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் பணி தீவிரம்

DIN

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125-ஆவது மலா்க் கண்காட்சி நடைபெறுவதையொட்டி,ரூ. 17 லட்சம் செலவில் பூங்காவை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் ஆண்தோறும் மலா்க் கண்காட்சி மே மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு மலா்க் கண்காட்சி மே 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மலா்க் கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரூ. 17 லட்சம் செலவில் தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் வடிவிலான இருக்கைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக உதகை தாவரவியல் பூங்கா புல் மைதான பகுதியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் தா்ப்பூசணி, பப்பாளி, பாகற்காய், கேரட் போன்ற வடிவங்களில் 6 இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நுழைவாயில் பகுதியில் உள்ள ஜப்பான் பூங்காவில் ரூ.7 லட்சம் மதிப்பில் ஜப்பானிய காஸிபோ எனப்படும் கோபுரம் மற்றும் மீன் காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT