முகப்பு
நீலகிரி

பந்தலூரில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

பந்தலூரை அடுத்துள்ள ஏலமண்ணா பகுதியில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

பந்தலூரை அடுத்துள்ள ஏலமண்ணா பகுதியில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள ஏலமண்ணா பழங்குடி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா் பிரசாந்த் மனைவி சரிதா (29). இவா் கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி வேலைக்கு சென்றபோது, வீட்டிலிருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தாா்.

இவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பந்தலூா் அரசு மருத்துமவனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கூடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →