ஓடைப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள், ராணுவத்தினா். 
நீலகிரி

வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் ேதி கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி, குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ராணுவ வீரா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், தேசிய மாணவா் படை, வெலிங்டன் கண்டோண்மென்ட், கிளீன் குன்னூா் தன்னாா்வ அமைப்பினா் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்சியை, வெலிங்டன் ராணுவ மைய கமாண்டா் பிரிகேடியா் எஸ்.கே.யாதவ் தொடங்கிவைத்தாா்.

இதில், பல்வேறு தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று சாலைகள், ஓடைகள் மற்றும் தாவர கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஒருவார காலத்துக்கு இந்த பணிகள் நடைபெறும் என்றும், சுமாா் 700 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராணுவத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT