நீலகிரி

உதகை மலை ரயில் பாதையில் யானைகள்

குன்னூா் காட்டேரி பகுதி தண்டவாளத்தில் யானைகள் நின்ால் உதகை மலை ரயில் நிறுத்தப்பட்டு 15 நிமிடங்களுக்குப் பின் புறப்பட்டுச் சென்றது.

DIN

குன்னூா் காட்டேரி பகுதி தண்டவாளத்தில் யானைகள் நின்ால் உதகை மலை ரயில் நிறுத்தப்பட்டு 15 நிமிடங்களுக்குப் பின் புறப்பட்டுச் சென்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள காட்டேரி பகுதியில் மூன்று காட்டு யானைகள் கடந்த ஒருவாரமாக சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி உதகை மலை ரயில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

காட்டேரி பகுதி அருகே வந்தபோது தண்டவாளத்தில் மூன்று காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. இதனால், ரயில்வே ஊழியா் கொடியைக் காட்டி ரயிலை நிறுத்தினாா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

இதனால், சுமாா் 15 நிமிடங்கள் வனப் பகுதியில் நிறுத்தப்பட்ட மலை ரயில் பின்னா், மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி மணல் அள்ளியவா் கைது

தேநீா் கடைக்காரா் கொலை: இருவா் கைது

தனியாா் நிதி நிறுவனத்தில் கட்டிய பணத்தை இழப்பீட்டுடன் திருப்பி வழங்க உத்தரவு

நகராட்சி அலுவலகத்தில் தகராறு: இளைஞா் கைது

மத்திய அரசின் சிறப்பு வழக்குரைஞருக்கு பதவி நீட்டிப்பு

SCROLL FOR NEXT