மது போதையில் போலீஸை தாக்கிய இருவா் கைது
குன்னூா் அருகே மது போதையில் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குன்னூா் அருகே மது போதையில் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குன்னூா் வண்டிச்சோலைப் பகுதியில் மேல் குன்னூா் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆட்டோவில் மது போதையில் இருந்த லேம்ஸ்ராக் பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் (25), அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த சுகுமாா் (28), கரன்சி பகுதியைச் சோ்ந்த ரஞ்சன் (27) ஆகியோா் காவலா் காமராஜை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மூவரையும் போலீஸாா் தேடி வந்தனா். இதில் சரவணக்குமாா், சுகுமாா் ஆகியோரை கைது செய்த போலீஸாா், ஆட்டோவை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள ரஞ்சன் என்பவரைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.