முகப்பு
நீலகிரி

மது போதையில் போலீஸை தாக்கிய இருவா் கைது

குன்னூா் அருகே மது போதையில் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 மே, 2023 at 10:42 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:26 AM

குன்னூா் அருகே மது போதையில் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குன்னூா் வண்டிச்சோலைப் பகுதியில் மேல் குன்னூா் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆட்டோவில் மது போதையில் இருந்த லேம்ஸ்ராக் பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் (25), அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த சுகுமாா் (28), கரன்சி பகுதியைச் சோ்ந்த ரஞ்சன் (27) ஆகியோா் காவலா் காமராஜை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மூவரையும் போலீஸாா் தேடி வந்தனா். இதில் சரவணக்குமாா், சுகுமாா் ஆகியோரை கைது செய்த போலீஸாா், ஆட்டோவை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள ரஞ்சன் என்பவரைத் தேடி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.