நீலகிரி

கோடை விடுமுறை: உதகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

கோடை விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த 3 நாள்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

DIN

கோடை விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த 3 நாள்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும்  மே மாதம் நடைபெறும் கோடை விழாவின்போது  தமிழகம்  மட்டுமில்லாமல் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவா் .

இந்நிலையில், மே 19ஆம் தேதி தொடங்கிய மலா்க் கண்காட்சி 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாள்கள் என்பதால் உதகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

இதில் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் மலா்க் கண்காட்சியை காண 81 ஆயிரம் போ் வருகை தந்துள்ளனா். மேலும், உதகை வந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி, குதிரை சவாரி மற்றும் காட்சி முனைகளை கண்டு ரசித்தனா். இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT