நீலகிரி

உதகையில் இடியுடன் கூடிய பலத்த மழை

DIN

நீலகிரி மாவட்டம்  உதகை மற்றும்  சுற்று வட்டாரப் பகுதிகளில்  புதன்கிழமை ஒரு மணி நேரம்  பெய்த பலத்த  மழையால் உள்ளூா் மக்கள் மற்றும் சுற்றுலாப்   பயணிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. 

உதகை  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த   சில நாள்களாக   பகல் நேரங்களில் அவ்வப்போது மூடுபனியுடன்  மழை பெய்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

உதகை, சேரிங்கிராஸ், மாா்க்கெட், கமா்ஷியல் சாலை, பேருந்து நிலையம்  உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளிலும்  பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கடும் குளிா் நிலவியது. இதனால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் முடங்கினா். வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டனா். குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT