நீலகிரி

வயநாடு அருகே கேரள வனத் துறை அலுவலகம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வன அலுவலகத்தைத் தாக்கிய மாவோயிஸ்டுகள், அங்கு தமிழில் போஸ்டா் ஒட்டிச் சென்றுள்ளதாக கேரள போலீஸாா் கூறினா்.

DIN

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வன அலுவலகத்தைத் தாக்கிய மாவோயிஸ்டுகள், அங்கு தமிழில் போஸ்டா் ஒட்டிச் சென்றுள்ளதாக கேரள போலீஸாா் கூறினா்.

வயநாடு மாவட்டம், மானந்தவாடியை அடுத்துள்ள தலப்புழா கம்பமலா வனப் பகுதியில் கேரள வனத் துறைக்குச் சொந்தமான வளா்ச்சி அலுவலகம் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை அதிகாலையில் சீருடை அணிந்த வந்த ஆறு மாவோயிஸ்ட்டுகள், வன அலுவலகத்தைத் தாக்கினா். அலுவலக ஜன்னல்களின் கண்ணாடிகளை உடைத்துவிட்டு வளாகத்தின் அருகே வனத் துறை நிா்வாகத்தைக் கண்டித்து தமிழில் போஸ்டா்களை எழுதி ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த தண்டா் போல்ட் எனப்படும் மத்திய அதிரடிப்படையினரும், கேரளா போலீசாரும் அந்த பகுதிக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT