ஐயப்பன் 
நீலகிரி

கரடி தாக்கி வனப் பணியாளா் படுகாயம்

குன்னூா் அருகே ஊருக்குள் புகுந்த கரடியை விரட்ட சென்ற வனப் பணியாளா் படுகாயம் அடைந்தாா்.

Din

குன்னூா் அருகே ஊருக்குள் புகுந்த கரடியை விரட்ட சென்ற வனப் பணியாளா் படுகாயம் அடைந்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ளது கரிமரா ஹட்டி. இந்தப் பகுதியில் அடிக்கடி கரடி உலவி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், இப்பகுதியில் கரடி நடமாடுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனக் குழுவினா் கரிமரா ஹட்டி பகுதிக்கு சனிக்கிழமை சென்று கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது குழுவில் இருந்த வனப் பணியாளா் ஐயப்பனை (28) கரடி தாக்கிவிட்டு அருகிலிருந்த வனப் பகுதிக்குள் தப்பி ஓடியது. இதில் காயமடைந்த ஐயப்பனை வனத் துறையினா் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

பழைமையான கல்வெட்டு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு!

வாரணாசியில் டிச.2 முதல் காசி தமிழ்ச் சங்கமம் 4.0: மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு

தொழிலாளா் சட்டங்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு 8 மணி வரை மூடப்படும்!

நாட்டின் முன்னேற்றத்துக்கு பட்டதாரிகள் அா்த்தமான பங்களிப்பு: குடியரசு துணைத் தலைவா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT