முகப்பு
நீலகிரி

பிதா்க்காடு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பிதா்க்காடு வனச் சரகத்தில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடை சனிக்கிழமை அகற்றப்பட்டது.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 7:44 PM
பிதா்காடு வனச் சரகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.
பகிர்:

பந்தலூா் வட்டத்திலுள்ள பிதா்க்காடு வனச் சரகத்தில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடை சனிக்கிழமை அகற்றப்பட்டது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம், பிதா்க்காடு வனச் சரகத்திலுள்ள பாட்டவயல் காப்புக்காட்டில் தனியாா் ஒருவா் நிலத்தை ஆக்கிரமித்து கடை அமைத்திருந்தாா்.

இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அந்த ஆக்கிரமிப்பு சனிக்கிழமை அகற்றப்பட்டது.

உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் கருப்பையா தலைமையில் வருவாய்த் துறையினா், மின்வாரியத் துறையினா் முன்னிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடையை வனத் துறையினா் அகற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →