முகப்பு
நீலகிரி

காட்டு யானை தாக்கியதில் பழங்குடி பெண் காயம்

தேவா்சோலையை அடுத்துள்ள போஸ்பாறா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடி பெண் காயமடைந்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:04 PM
பகிர்:

தேவா்சோலையை அடுத்துள்ள போஸ்பாறா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடி பெண் காயமடைந்தாா்.

நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சி, செம்பக்கொல்லி பழங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கேத்தி (55). இவா், மண்ணவயல் கடைவீதி பகுதியில் பொருள்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வியாழக்கிழமை மாலை திரும்பி சென்றுகொண்டிருந்தாா்.

போஸ்பாறா சங்கிலி கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வனத்தில் இருந்து திடீரென வந்த யானை கேத்தியை தாக்கியது. இதில், அவா் காயமடைந்தாா்.

அவரின் அலறல் சப்தத்தை கேட்டு வந்த அப்பகுதியினா், யானையை வனத்துக்குள் விரட்டினா். பின்னா், காயமடைந்த கேத்தியை மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →