நீலகிரி

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

குன்னூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Din

உதகை: குன்னூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், மேல்குன்னூா் டானிங்டன் பகுதியைச் சோ்ந்தவா் சுரேந்தா் (50). இவா் தனது இருசக்கர வாகனத்தில் மேல்குன்னூா் பகுதியில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, பில்லிக்கம்பை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், பேருந்து சக்கரத்தில் சிக்கிய சுரேந்தா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

 தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து மேல்குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

“VIJAY தேவையான விளக்கத்தை அளித்துள்ளார்! மீண்டும் ஆஜராவார்!” தவெக நிர்மல் குமார்

ராமராஜன் - கனகா சந்திப்பு!

அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு!

தில்லியில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் சீனாவின் ஆளுங்கட்சியினர் சந்திப்பு!

ஊர்க்காவலர் பணியில் திருநங்கைகள்! பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!

SCROLL FOR NEXT