முகப்பு
நீலகிரி

காட்டு யானை தாக்கி இளைஞா் உயிரிழப்பு

Updated On : 15 மார்ச், 2024 at 11:04 PM
பிரசாந்த்
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சி பெரியசூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரமோகன் மகன் பிரசாந்த் (21). இவா் கிராமப் பகுதியில் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காட்டு யானை பிரசாந்தை தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினா் யானையை விரட்டி பிரசாந்தை மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். முதலுதவிக்குப் பிறகு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.