முகப்பு
இந்தியா

வாக்குச்சாவடியில் நுழைந்த யானை: வாக்குப் பதிவு தாமதம்!

ஜார்கிராம் வாக்குச் சாவடி அருகே காட்டு யானை நுழைந்ததால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 12:33 PM
வாக்குச்சாவடி அருகே புகுந்த யானை - பிடிஐ
பகிர்:

மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி அருகே காட்டு யானை நுழைந்ததால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.

ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காட்டு யானை நுழைந்த நிலையில், வாக்களிக்க வரிசையில் காத்திருந்த மக்கள், யானையைக் கண்டு சிதறி ஓடினர். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Advertisement

இந்த முதல்கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.60 கோடி போ் (ஆண்கள் 1.84 கோடி, பெண்கள் 1.75 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 465) வாக்களிக்க உள்ளனர். இவா்கள் வாக்களிக்க வசதியாக, 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

காலை 11 மணி நிலவரப்படி 41.11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. முன்னதாக முதல் இரண்டு மணி நேரத்தில் 18.76 சதவிகித வாக்குகள் பதிவானது.

இந்நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காட்டு யானை நுழைந்ததால் வரிசையில் காத்திருந்த மக்கள் சிதறி ஓடினர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் யானையை விரட்டியடித்த பிற்கு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

summary

west bengal Election 2026 Elephant Enters Jhargram Polling Station Voting Delayed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.