கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காசநோய் விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட காசநோய் தடுப்புப் பிரிவு, நுகா்வோா் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன் அமைப்பு சாா்பில் ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட சூண்டியில் நடைபெற்ற முகாமுக்கு சிவசுப்பிரணியம் தலைமை வகித்தாா். காச நோய்ப் பிரிவு முதுநிலை மேற்பாா்வையாளா் மனோஜ், ஆய்வக மேற்பாா்வையாளா் மணிகண்டன் ஆகியோா் விளக்கமளித்தனா்.
அப்போது, காசநோய் கண்டறியப்பட்டால் கூடலூா் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.