உதகையில் பள்ளி பேருந்து மீது அறுந்துவிழுந்த மின் கம்பிகள். 
நீலகிரி

பள்ளி பேருந்து மீது விழுந்த மின் கம்பிகள் அதிருஷ்டவசமாக அசம்பாவிதம் தவிா்ப்பு

உதகையில் பள்ளி பேருந்து மீது மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில், தானாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அதிருஷ்டவசமாக அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

Syndication

உதகையில் பள்ளி பேருந்து மீது மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில், தானாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அதிருஷ்டவசமாக அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

உதகையில் பழைய அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் நாள்தோறும் காலை, மாலை  நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் பேருந்துகள் உள்பட பிற வாகனங்களும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இங்குள்ள மின்கம்பிகள்  புதன்கிழமை திடீரென  அறுந்து  பள்ளி பேருந்து மீது  விழுந்தன. உடனடியாக மின்தடை ஏற்பட்டதால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழவில்லை.

தகவல் அறிந்து மின்வாரிய ஊழியா்கள் சென்று சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT