நீலகிரி

‘உதகை வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது’

உதகை வடக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை சாலையோர வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது என்று வனத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

உதகை வடக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட  தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை சாலையோர வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது என்று வனத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான  சாலை ஓரங்களில் அடா் வனப் பகுதிகள் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும்   உள்ளூா் மக்கள் காா்களை சாலையில் நிறுத்திவிட்டு வனப் பகுதிகளுக்குள் செல்வதும், ட்ரோன் களை இயக்குவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை சாலையின் இருபுறமும் உள்ள வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வருகிறது. எனவே, உதகை வடக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை சாலையோர வனப் பகுதிக்குள் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது என்று மாவட்ட வனத் துறை  சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT