முகப்பு
நீலகிரி

வணிக நிறுவன பெயா் பலகைகள் தமிழில் இருப்பது கட்டாயம்

நீலகிரி மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயா் பலகை தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2025 at 12:26 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயா் பலகை தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் லெனின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-இன் படி தங்களது வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் 5:3:2 என்ற விகிதத்தில் அமைத்திருக்க வேண்டும்.

இதனை மீறும் நிறுவனங்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →