நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கருஞ்சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கோ்பெட்டா கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இரண்டு நாய்கள் காணாமல் போனதால், அப்பகுதி மக்கள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, குடியிருப்புப் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாடிய காட்சி பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனா். எனவே, வனத் துறையினா் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.