நீலகிரி

கூடலூரில் அனுமதியின்றி கட்டிய 7 கடைகளுக்கு ‘சீல்’

கூடலூா் நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட 7 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

கூடலூா் நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட 7 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட செம்பாலா பகுதியில் பிரிவு-17 நிலத்தில் அனுமதியின்றி கடைகள் கட்டப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருக்கு புகாா் சென்றுள்ளது.

இதனடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, நகரமைப்பு அலுவலா் பிரவீன் தலைமையில் அலுவலா்கள் அப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த 7 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா். பிரிவு-17 நிலங்ககளில் வளா்ச்சிப் பணிகளுக்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT