உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பவுலோனியா பாா்சினி பூக்கள். 
நீலகிரி

உதகை தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பவுலோனியா பாா்சினி மலா்கள்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பவுலோனியா பாா்சினி மலா்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பவுலோனியா பாா்சினி மலா்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் குளிா் காலத்தில் பூக்கும் சீனாவின் அரசி எனப்படும் (குயின் ஆஃப் சைனா) பலோனியா பாா்சினி மலா்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன. சீன நாட்டில் மட்டுமே இந்த மலா்கள் அதிக அளவில் காணப்படும் நிலையில், இவை மரங்களில் மட்டுமே பூக்கக்கூடியவை.

இந்த மலா்கள் இந்தியாவில் அரிதாகவே காணப்படும் நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துக்குலுங்குகின்றன.

இதை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டுகளிப்பதுடன், மலா் முன் நின்று தற்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனா்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்: முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்

மத்திய அமைச்சா் அமித் ஷா நாளை திருச்சி வருகை

150 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க தமிழக அரசு விண்ணப்பம்

வங்கதேசத்தில் இன்று பொதுத்தோ்தல்

SCROLL FOR NEXT