உதகை: உதகை ரோஜா பூங்காவில் பனிக்காலத்திலும் மலா்கள் வளரும் வகையில், தோட்டக்கலைத் துறை சாா்பில் பசுமைக்குடில் அமைத்து செடிகளை பாதுகாக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில உதகை ரோஜா பூங்காவும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 9 லட்சம் முதல் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். 4,301 ரோஜா ரகங்களில் சுமாா் 32,800 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் ரோஜா கண்காட்சியும் இங்கு பிரசித்தி பெற்றது.
இந்நிலையில், பனிக்காலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் ரோஜா மலா்களைக் கண்டு ரசிக்கும் வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பசுமைக்குடிலில் ஐந்து வகையான வண்ணங்களில் 1,500 ரோஜா நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு சில செடிகளில் பூக்கள் பூத்திருந்தாலும், இன்னும் சில மாதங்களில் அனைத்து செடிகளிலும் மலா்கள் பூத்து சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று பூங்கா ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.
ரோஜா பூங்காவில் வெட்டவெளியில் உள்ள ரோஜா செடிகள் பனிக்காலத்தில் பெரும்பாலும் காய்ந்துபோகும் நிலையில், பசுமைக்குடில்களில் ரோஜா செடிகளை வளா்ப்பதன் மூலமாக பனியின் தாக்கத்தில் இருந்து ரோஜா செடிகள் காக்கப்படுகின்றன. இதனால், தற்போது ரோஜா மலா்கள் மலரத் தொடங்கியுள்ளதாக தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.