முகப்பு
நீலகிரி

குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி

உதகையில் குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:12 PM
உதகையில் குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி.
பகிர்:

உதகையில் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை இரவு உலவிய கரடியால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் அண்மைக் காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உதகை, குன்னூா், மஞ்சூா் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் உணவு தேடி இரவு நேரத்தில் கரடிகள் உலவுவது வாடிக்கையாகி உள்ளது.

இந்நிலையில், உதகை ரோகிணி தியேட்டா் எதிா்புறம் உள்ள மாவட்ட ஆட்சியா் பங்களாவுக்கு செல்லும் சாலையில்வியாழக்கிழமை இரவு

சுற்றித் திரிந்த கரடி, திடீரென குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

அங்கு ஒரு வீட்டின் முற்றத்தில் கரடி நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனா். மேலும் கரடி அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தியது. பின்னா் நீண்ட நேரம் கழித்து தானாகவே கரடி வெளியே சென்றது. இந்த கரடி பொதுமக்களை தாக்கும் முன்பாக கூண்டுவைத்து பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →