மலா்க் கண்காட்சியை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
மலா்க் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக உதகையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறையினா் அறிவித்துள்ளனா்.
மலா்க் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக உதகையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறையினா் அறிவித்துள்ளனா்.
உதகையில் நடைபெறும் மலா்க் கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஆண்டுதோறும் கோடைக் காலத்தின் போது, சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள், சா்க்கீயூட் பேருந்துகள் மற்றும் பாா்க் அன்ட் ரெய்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இம்முறை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சா்க்கீயூட் பேருந்துகள் கடந்த ஏப்ரல் மாதம் முதலே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டு மலா்க் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கூடுதல் சா்க்கீயூட் பேருந்துகள், பாா்க் அன்ட் ரெய்டு பேருந்துகள் மலா் கண்காட்சி நடக்கும் 11 நாள்களும் இயக்கப்படவுள்ளன.
Advertisement
இது தவிர கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையத்துக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்துகள் 5 முதல் 15 நிமிஷங்களுக்கு ஒரு முறை இயக்கப்படவுள்ளன.
இதேபோல கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, திருப்பூா் பகுதிகளில் இருந்தும் உதகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்களில் குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி சாலையில் பேருந்துகள் பழுதாகி நின்றால், உடனுக்குடன் சீரமைக்க மொபைல் வேன்கள் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பழுதாகி நின்றாலும், அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கிரேன்கள் தயாா் நிலையில் உள்ளன. சிறப்பு பேருந்துகளை முறையாக இயங்குவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறையினா் தெரிவித்தனா்.