திருப்பூர்

கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

DIN

ஊத்துக்குளி அருகே கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், முத்தனம்பாளையம் அருகே உள்ள காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கே.விஜய் (25). இவருக்கு, முதலிபாளையம் அருகே உள்ள சிப்காட் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த, ஏற்கெனவே திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், முதலிபாளையம் பகுதியில் உள்ள பொதுக் கிணற்றில் குதித்து வெள்ளிக்கிழமை இரவு விஜய் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, தகவலறிந்த திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சனிக்கிழமை விஜயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ஊத்துக்குளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT