திருப்பூர்

பெண்ணிடம் நகைப் பறிக்க முயற்சி

DIN

திருப்பூரில் பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர், பெரியார் காலனி அருகேயுள்ள சாமிநாதபுரம், முதல் வீதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி (34). இவர் தனது வீட்டின் அருகே சனிக்கிழமை நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த நபர் திடீரென ராஜேஸ்வரி அணிந்திருந்த சங்கிலியைப் பறிக்க முயன்றார். அப்போது ராஜேஸ்வரி சப்தம் போடவே,  அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் நகையைப் பறிக்க முயன்ற நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுதொடர்பாக ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் 15-வேலம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT